×

9 ஐஎஸ் தீவிரவாதிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 9 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை துணைகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாரிக், மாஸ் முனீர் அகமது, சையத் யாசின், ரீஷான் தாஜுதின் ஷேக், ஹுசைர் ஃபர்ஹான் பைக், மசின் அப்துல் ரஹ்மான், நதீம் அகமது கேஏ, ஜபியுல்லா மற்றும் நதீம் பைசல் என் ஆகிய 9 பேரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கர்நாடகா மாநிலம் ஷிவமோகா புறநகர் போலீசில் கடந்த ஆண்டு செப்.19ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நவம்பர் 15ம் தேதி என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட 9 பேரும் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டனர். கிரிப்டோ கரன்சி மூலம் நிதிதிரட்டுதல் மற்றும் ரோபோ மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர்கள் மீது கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேசிய புலனாய்வு முகமை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

The post 9 ஐஎஸ் தீவிரவாதிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : NIA ,New Delhi ,National Intelligence Agency ,IS ,Karnataka… ,9 ,Dinakaran ,
× RELATED சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால்...